பாம்பு ஆலயத்தில் பல பாம்புகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கும். அவை வாகலர் வகை கட்டு விரியன் பாம்புகள் . விஷப் பல் பையை எடுத்து விட்டால் அவற்றின் வாழ்நாள் குறைந்து விடும் என்பதினால் அவற்றை எடுப்பது இல்லை . ஆனால் அவை கடித்தால் அதன் வலி தாங்க முடியாமல் இருக்கும் என்பதினால் அவற்றை இந்தப் படங்களின் மூலமே பார்த்து திருப்தி அடையுங்கள். பாம்பு ஆலயத்தில் உள்ள பாம்புகளைக் காண வேண்டுமானால் ஆலய விழா நாட்களில் செல்ல வேண்டாம். ஏன் எனில் அப்போது வரும் பெரும் கூட்டத்தினால் பாம்புகளுக்கு இடையூறு ஏற்படுகின்றது என்பதற்காக அப்போது அந்தப் பாம்புகளை பாதுகாப்பாக வேறு இடத்தில் வைத்து விடுகிறார்கள். இந்தப் படங்கள் நான் என் மனைவியுடன் 2008 -09 ஆம் ஆண்டில் அந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டவுடன் சென்றபோது எடுத்தவை.