குவான் இன் சி ஆலயம்
Translated into Tamil by Santhipriya

Kuan Yin See, Temple of the Goddess of Mercy, at night, during the Nine Emperor Gods Festival (8 October 2005)
Location Map to Kuan Yin See
 Main entrance of the Kuan Yin See (16 October 2004)
 A side entrance of the Kuan Yin See (16 October 2004)
ஜலன் பர்மாவில் கருணை மாதாவிற்காக ஏற்பட்டதே டவோஸ்ட்டுக்களின் குவான் இன் சி ( Kuan Yin See) எனும் ஆலயம். குவான் இன் தாங் ஆலயத்தில் இருந்து மாறுபட்டது இந்த ஆலயம் . இந்த கருணை மாதா ஆலயத்தின் பெயரை ஜலான் மஸ்ஜித் கபிடன் கெலிங் (Jalan Masjid Kapitan Keling) என்றும் கூறுவார்கள்.
1922 ஆம் ஆண்டில் குவான் இன் சி ஆலயத்தை கேக் லோக் சி ( Kek Lok Si Temple ) ஆலயத்தின் இரண்டாவது மடாதிபதியாக இருந்த பெண் சாங் (Ben Zhong) என்பவர் ஸ்தாபித்தார். அவரே 10 ,000 புத்தர் சிலை ஆலயத்தை நிறுவியவர். ஆலயத்தின் நுழை வாயிலில் ஆலயத்தின் ஒரு பெயர் பொறித்த கல்லும், இரண்டு நுழை வாயில் தூண்களிலும் குவிங் பிரிட்டிஷ் அரசில் (Qing imperial court) இருந்த சென் பயொசேன் (Baochen) என்ற அதிகாரி எழுதி உள்ள செய்யுள் போன்ற வாசகங்களும் உள்ளன.
இந்த கருணை மாதா ஆலயம் பெனாங்கில் உள்ள ஒன்பது மன்னர்கள் ஆலயத்தின் (Nine Emperor Gods Temple of Penang,) விழாவில் அதிக அளவு ஈடுபட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது லேபுக் மகளும் (Lebuh Macallum) எனும் இடத்தில் உள்ள ஒன்பது மன்னர்கள் ஆலயமும் இங்குள்ள ஒன்பது மன்னர்கள் ஆலயமும் வேறு வேறானவை என எண்ண வைக்கின்றது. அந்த ஆலய விழாவின்போது குவான் இன் சி ஆலயம் பலவிதமான சைவ உணவுகளை கொண்ட கடைகளை தமது ஆலய வளாகத்துக்குள் வைத்துக்கொள்ள அனுமதிக்கின்றது. அயர் இதாமில் ஜலான் ஜூவை நிறுவிய பா காங் (Fa Kong) என்ற பட்ட மதத் துறவிக்கு ஒரு காலத்தில் குவான் இன் சி ஆலயமே இருப்பிடமாக இருந்துள்ளது. கேக் லோக் சி ஆலயத் தோட்டத்தில் உள்ள பாறைகளில் ஜென் மொழியில் ( Zen verses) அவரைப் பற்றிய வர்ணனைகள் காணப்படுகின்றன.
ஆலயம் செல்லும் வழி
கொம்தார் பஸ் நிலையத்தில் (Komtar Bus Terminal) இருந்து லேபுக் டேக்கை நோக்கி நடந்து சாலன் பெனாங்கை அடைந்ததும் வலப்புறம் திரும்பி அங்கு உள்ள ஒரு பாலம் வரை நடக்க வேண்டும். அங்கு சென்ற பின் ஜலான் பர்மா எனும் இடத்தில் உள்ள சாலையை கடக்க வேண்டும். அந்த சாலையிலேயே தொடர்ந்து சென்றால் ஆலயத்தை அடையலாம்.
 ஆலய நுழை வாயில்(16 October 2004)
 ஆலயக் கதவுகளில் காவல் தெய்வத்தின் படங்கள் (16 October 2004)
 ஆலயத்துக்கு வந்து வணங்கும் பக்தர் ஊதுபத்தியை ஏற்றும் காட்சி (16 October 2004)
 ஆலய சுவற்றின் மேல் பகுதியில் உள்ள காட்சி (16 October 2004)
 ஆலயத்தின் இன்னொரு தோற்றம் (12 December 2007)
|